செய்திகள்

‘செல்பி’ மோகத்தால் ஆற்றில் மூழ்கி 2 இளம்பெண்கள் பலி

Published On 2017-10-27 22:20 GMT   |   Update On 2017-10-27 22:20 GMT
செல்பி மோகத்தால் ஆந்திராவை சேர்ந்த 2 இளம்பெண்கள் ஒடிசாவில் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோராபுட்:

ஆபத்தான பகுதிகளில் நின்றவாறும், வித்தியாசமான முறையிலும் ‘செல்பி’ புகைப்படங்களை எடுப்பதில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது. அப்படிப்பட்ட செல்பி மோகத்தால் ஆந்திராவை சேர்ந்த 2 இளம்பெண்கள் ஒடிசாவில் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 9 பெண்கள் சேர்ந்து ஒடிசாவின் ராயகடா மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றனர். நேற்று முன்தினம் அங்குள்ள நாகபலி ஆற்றில் கட்டப்பட்டு இருந்த தொங்கு பாலத்துக்கு சென்ற அவர்கள் அங்கேயே நின்றவாறு பல்வேறு புகைப்படங்களை எடுத்தனர்.

பின்னர் ஆற்றின் நடுவில் இருந்த பாறையில் நின்றுகொண்டு அவர்கள் செல்பி புகைப்படம் எடுத்தனர். அப்போது ஜோதி (வயது 27), ஸ்ரீதேவி (23) ஆகிய 2 இளம்பெண்கள் எதிர்பாராதவிதமாக கால்தவறி ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் வெள்ளத்தில் மூழ்கி அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இளம்பெண்களின் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News