செய்திகள்
காஷ்மீரில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வீடு மீது குண்டுவீச்சு
காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ. வீடு மீது தீவிரவாதிகள் கையெறிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஸ்ரீநகர் :
ஜம்மு - காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ. வீடு மீது தீவிரவாதிகள் கையெறிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட திராலில் உள்ள எம்.எல்.ஏ. முஷ்தக் அகமது ஷா வீடு மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் வீட்டின் வெளியே பாதுக்காப்புக்காக இருந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலின்போது வீட்டில் யாரும் இல்லாததால் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 21-ம் தேதி திரால் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய கையெறிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.