செய்திகள்
சுற்றிவளைத்து கத்தியால் குத்தியபோது 5 பேரை கடித்து குதறி எஜமானரை காப்பாற்றிய நாய்
டெல்லியில் மர்ம நபர்கள் தனது எஜமானரை சுற்றிவளைத்து கத்தியால் குத்துவதைப் பார்த்து ஆவேசமடைந்த அவரது வளர்ப்பு நாய், அந்த நபர்களை கடித்துக் குதறி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள மங்கோல்புரியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 58). இவர் நாய் ஒன்று வளர்த்து வருகிறார். நேற்று மாலை தனது வீட்டின் எதிரே ராஜேஷ் நடைபயிற்சி சென்றார். அப்போது அவரது நாயும் உடன் சென்றது.
அந்த நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ராஜேசை சுற்றி வளைத்தது. அவரை கத்தியால் குத்த சென்றனர். அப்போது அவரது நாய் அவர்களை பார்த்து குரைத்து கடிக்க பாய்ந்தது.
உடனே அவர்கள் நாயை கத்தியால் குத்தினார்கள். ஆனாலும் நாய் விடவில்லை. தொடர்ந்து 5 பேரையும் கடித்து குதறியது. நாயின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவர்கள் தடுமாறினார்கள்.
இதற்குள் சத்தம் கேட்டு ராஜேஷ் வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதனால் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். இந்த நபர்கள் தாக்கியதில் ராஜேசுக்கும் கத்திக்குத்து விழுந்திருந்தது.
ஆனாலும், நாய் தடுத்ததால் அதிக அளவில் காயங்கள் இல்லை. ராஜேசையும், நாயையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
ராஜேசை தாக்கியவர்கள் யார் என்று அடையாளம் கண்டிருப்பதாகவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள மங்கோல்புரியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 58). இவர் நாய் ஒன்று வளர்த்து வருகிறார். நேற்று மாலை தனது வீட்டின் எதிரே ராஜேஷ் நடைபயிற்சி சென்றார். அப்போது அவரது நாயும் உடன் சென்றது.
அந்த நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ராஜேசை சுற்றி வளைத்தது. அவரை கத்தியால் குத்த சென்றனர். அப்போது அவரது நாய் அவர்களை பார்த்து குரைத்து கடிக்க பாய்ந்தது.
உடனே அவர்கள் நாயை கத்தியால் குத்தினார்கள். ஆனாலும் நாய் விடவில்லை. தொடர்ந்து 5 பேரையும் கடித்து குதறியது. நாயின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவர்கள் தடுமாறினார்கள்.
இதற்குள் சத்தம் கேட்டு ராஜேஷ் வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதனால் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். இந்த நபர்கள் தாக்கியதில் ராஜேசுக்கும் கத்திக்குத்து விழுந்திருந்தது.
ஆனாலும், நாய் தடுத்ததால் அதிக அளவில் காயங்கள் இல்லை. ராஜேசையும், நாயையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
ராஜேசை தாக்கியவர்கள் யார் என்று அடையாளம் கண்டிருப்பதாகவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.