செய்திகள்
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் 34 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி - 4 பேர் கைது
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் போலியான நில ஆவணங்கள் மூலம் வங்கியில் 34 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய கும்பலைச் சேர்ந்த 4 பேரை பல ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்:
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கபு மற்றும் துர்கா பிரசாத் ஆகிய இருவரும் கடந்த 2007ம் ஆண்டு அரசு அதிகாரி ஜி.எல்.கணேஷ்வரா என்பவரின் உதவியுடன் போலியான நில ஆவணங்கள் தயாரித்தனர். வேப்பகுண்டா பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் பெயரில் இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போலி ஆவணங்கள் மூலம் 2014-ம் ஆண்டு வங்கியில் 34 கோடி ரூபாய் கடன் வாங்கினர். அதனை திருப்பிக் கொடுக்காததால் வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அது போலி ஆவணம் என்ற உண்மை தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தலைமறைவாகினர்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கடன் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரில் நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கபு மற்றும் துர்கா பிரசாத் ஆகிய இருவரும் கடந்த 2007ம் ஆண்டு அரசு அதிகாரி ஜி.எல்.கணேஷ்வரா என்பவரின் உதவியுடன் போலியான நில ஆவணங்கள் தயாரித்தனர். வேப்பகுண்டா பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் பெயரில் இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போலி ஆவணங்கள் மூலம் 2014-ம் ஆண்டு வங்கியில் 34 கோடி ரூபாய் கடன் வாங்கினர். அதனை திருப்பிக் கொடுக்காததால் வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அது போலி ஆவணம் என்ற உண்மை தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தலைமறைவாகினர்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கடன் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரில் நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.