செய்திகள்
மூன்று மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் மாவட்டத்தில் மூன்று மகள்களுடன் தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள துல்ஜாபூர் பகுதியைச் சேர்ந்த சாயா சவான் தனது மூன்று மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சாயா தனது மூன்று மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நான்கு பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள துல்ஜாபூர் பகுதியைச் சேர்ந்த சாயா சவான் தனது மூன்று மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சாயா தனது மூன்று மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நான்கு பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.