செய்திகள்
ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 13 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிலர் அப்பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி மேற்கொண்டனர். அப்போது பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்தது. இதில், படகில் சவாரி செய்த அனைவரும் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினர்.
ஏரியின் நடுப்பகுதியில் படகு கவிழ்வதை கரையில் இருந்து கவனித்த சிலர் உள்ளே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 2 குழந்தைகளை உயிருடன் மீட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 13 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 8 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும், 5 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகை சரியாக பரிசோதித்து பார்க்காமல் அதிக நபர்கள் பயணம் செய்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிலர் அப்பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி மேற்கொண்டனர். அப்போது பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்தது. இதில், படகில் சவாரி செய்த அனைவரும் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினர்.
ஏரியின் நடுப்பகுதியில் படகு கவிழ்வதை கரையில் இருந்து கவனித்த சிலர் உள்ளே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 2 குழந்தைகளை உயிருடன் மீட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 13 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 8 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும், 5 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகை சரியாக பரிசோதித்து பார்க்காமல் அதிக நபர்கள் பயணம் செய்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.