செய்திகள்
3 நாள் பயணமாக பூடான் செல்கிறார் ராணுவ தளபதி ராவத்
ராணுவ தளபதி பிபின் ராவத் 3 நாள் பயணமாக இன்று பூடான் செல்கிறார்.
புதுடெல்லி:
இந்திய ராணுவத்தின் 27–வது தளபதியாக பிபின் ராவத், டெல்லி தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி டிசம்பர் 31-ம் தேதி(சனிக்கிழமை) பதவி ஏற்றார். புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பிபின் ராவத் மூன்று நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றார்.
அதன்பின்னர் பல்வேறு நாடுகளுக்கு பிபின் ராவத் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, ராணுவ தளபதி பிபின் ராவத் 3 நாள் பயணமாக இன்று பூடான் செல்கிறார். அங்கு இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
தனது பயணத்தின் முக்கிய பகுதியாக பூடா பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் பூடான் அரசர் ஜிக்மி கேசர் நம்கெயிலையும் சந்திக்க உள்ளார்.
இந்திய ராணுவத்தின் 27–வது தளபதியாக பிபின் ராவத், டெல்லி தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி டிசம்பர் 31-ம் தேதி(சனிக்கிழமை) பதவி ஏற்றார். புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பிபின் ராவத் மூன்று நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றார்.
அதன்பின்னர் பல்வேறு நாடுகளுக்கு பிபின் ராவத் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, ராணுவ தளபதி பிபின் ராவத் 3 நாள் பயணமாக இன்று பூடான் செல்கிறார். அங்கு இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
தனது பயணத்தின் முக்கிய பகுதியாக பூடா பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் பூடான் அரசர் ஜிக்மி கேசர் நம்கெயிலையும் சந்திக்க உள்ளார்.