செய்திகள்
காஷ்மீர்: பட்டப்பகலில் வங்கியை கொள்ளையடித்துச் சென்ற தீவிரவாதிகள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று அரசு வங்கியில் இருந்த பணத்தை தீவிரவாதிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தின் ஹர்மைன் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஜம்மு-காஷ்மீர் வங்கியின் கிளை ஒன்றுள்ளது. இன்று காலை 11 மணியளவில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்த வங்கிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் உள்ளே இருந்த வங்கி பணியாளர்களை மிரட்டி, அங்கிருந்த பணத்தை அள்ளிக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், கொள்ளையர்களை பிடிப்பதற்காக வங்கியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற பணம் எவ்வளவு? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தின் ஹர்மைன் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஜம்மு-காஷ்மீர் வங்கியின் கிளை ஒன்றுள்ளது. இன்று காலை 11 மணியளவில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்த வங்கிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் உள்ளே இருந்த வங்கி பணியாளர்களை மிரட்டி, அங்கிருந்த பணத்தை அள்ளிக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், கொள்ளையர்களை பிடிப்பதற்காக வங்கியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற பணம் எவ்வளவு? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.