செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த பாராளுமன்ற சபாநாயகரிடம் மனு

Published On 2017-04-12 09:48 GMT   |   Update On 2017-04-12 09:48 GMT
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த சுந்தரம் எம்.பி. மனு கொடுத்தார்.
புதுடெல்லி:

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 7-ந்தேதி வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த நாமக்கல் எம்.பி. சுந்தரம் ஒரு மனு கொடுத்தார்.

அதில், "வருமான வரிச்சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Similar News