செய்திகள்

வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள்: காவல்துறை விசாரணை

Published On 2017-03-20 10:41 GMT   |   Update On 2017-03-20 10:41 GMT
சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவர் மோதிக்கொண்ட விவகாரம் மதுரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரா:

உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே யமுனா அதிவிரைவுச் சாலை சுங்கச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ் குமார் கிரி, ராஜேந்திர சிங் இருவரும் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். இருவரும் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையிலான விவாதம் வாக்குவாதமாக மாறியது.

வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ராஜேந்திர சிங் இருவருக்கும் காயம் உண்டானது. இவர்கள் மோதிக்கொண்டதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறை உயரதிகாரி சஞ்சய் குமார் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மோதிக்கொண்ட விவகாரம் மதுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News