செய்திகள்

காதலிக்காக 2000 ரூபாய் நோட்டால் காரை அலங்காரம் செய்து போலீசில் சிக்கிய காதலன்

Published On 2017-02-14 16:24 GMT   |   Update On 2017-02-14 16:24 GMT
காதலியை கவர்வதற்காக தன்னுடைய காரை புதிய 2000 ருபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்த காதலன் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
மும்பை:

உலகம் முழுவதும் உள்ள காதலர்களால், இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதிதாக காதலில் விழுந்தவர்களும் புதுப் புது திட்டங்களுடன்  தங்களது காதலியை கவர்வதற்காக முயற்சி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காதலர் தினத்தன்று தன் காதலியை கவர்வதற்காக தன்னுடைய கார் முழுவதும் புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாயைக் கொண்டு அலங்கரித்து வந்திருந்தார்.

2000 ரூபாயால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கார் சாலையில் சென்றதைக் கண்ட போக்குவரத்து போலீசார், காரை மடக்கிப் பிடித்து அந்த இளைஞரை, காருடன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகள் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் இன்னும் நீடித்து வரும் நிலையில் அந்த இளைஞருக்கு அளவுக்கு அதிகமான பணம் எங்கிருந்து கிடைத்தது என போலீசார் கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News