செய்திகள்
டெல்லியில் கடும் பனி: விமான, ரெயில் சேவைகள் பாதிப்பு
டெல்லியில் இன்று காலை கடுமையான மூடு பனி இருந்தது. இதனால் விமானம் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. காலையில் பொழுதுவிடிந்து வெகுநேரமாகியும் சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைகிறது.
அவ்வகையில் இன்று காலையிலும் கடும் பனி மூட்டம் இருந்தது. டெல்லியில் இன்று காலையில் பனிப்போர்வை போர்த்தியதுபோன்று காட்சியளித்தன. இதன் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது.
28 ரெயில்கள் தாமதமாக வருகின்றன. 10 ரெயில்களின் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. ஒரு ரெயில் ரத்து செய்யப்பட்டது. இதே போல் பல்வேறு விமானங்கள் தரை இறங்குவதிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. காலையில் பொழுதுவிடிந்து வெகுநேரமாகியும் சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைகிறது.
அவ்வகையில் இன்று காலையிலும் கடும் பனி மூட்டம் இருந்தது. டெல்லியில் இன்று காலையில் பனிப்போர்வை போர்த்தியதுபோன்று காட்சியளித்தன. இதன் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது.
28 ரெயில்கள் தாமதமாக வருகின்றன. 10 ரெயில்களின் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. ஒரு ரெயில் ரத்து செய்யப்பட்டது. இதே போல் பல்வேறு விமானங்கள் தரை இறங்குவதிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.