செய்திகள்

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: அரசாணை வெளியானது

Published On 2017-01-22 10:32 GMT   |   Update On 2017-01-22 10:32 GMT
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க தொடர் போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த எழுச்சிமிகு போராட்டம் மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்குவதற்கான அவசர சட்டம் நேற்று பிறப்பிக்கப்பட்டது. 

இந்த அவசர சட்டம் நாளை நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் சட்ட முன்வரைவாக (மசோதா) நிறைவேற்றப்படும் என  தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில், நேற்று பிரகடனப்படுத்தபட்ட அவசர சட்டத்திற்கான அரசாணை (Notification) இன்று வெளியாகியுள்ளது. 

Similar News