செய்திகள்

ரூபாய் நோட்டு பிரச்சனையால் பொருளாதாரத்தில் மந்த நிலை: பிரணாப் முகர்ஜி திடீர் எச்சரிக்கை

Published On 2017-01-05 16:01 GMT   |   Update On 2017-01-05 16:10 GMT
ரூபாய் நோட்டு விவகாரம் இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ரூபாய் நோட்டு விவகாரம் இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

ரூபாய் நோட்டு விவகாரம் கருப்பு பணத்தை ஒழிக்கவும், ஊழலை எதிர்க்கவும் பயன்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும். ரூபாய் நோட்டு விவகாரம் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு வரவேற்கிறேன். இந்த தருணத்தில் ஏழை மக்களின் துயர நிலையை போக்க நாம் அனைவரும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News