செய்திகள்

ஐதராபாத்: 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு

Published On 2016-12-09 18:07 GMT   |   Update On 2016-12-09 18:07 GMT
ஐதராபாத் நகரில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
ஐதராபாத்:

ஐதராபாத் நகரில் உல்ல நனாகுராகுடா பகுதியில் 7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

கட்டிடம் இடிந்து விழுந்த போது அதன் 6-வது மாடியில் தொழிலாலர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் 14 குடும்பத்தினர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக, ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநகராட்சி போலீசார், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அந்த இருவர் தாய் மற்றும் மகன் ஆவர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Similar News