செய்திகள்

டெல்லி மேல்-சபையில் சோவுக்கு இரங்கல்

Published On 2016-12-07 08:57 GMT   |   Update On 2016-12-07 08:57 GMT
நடிகரும், பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி மறைவுக்கு டெல்லி மேல்-சபையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:

சோ ராமசாமி மறைவுக்கு டெல்லி மேல்-சபையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளரை நாடு இழந்து விட்டதாக மேல்-சபை தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.

சோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

சோ டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News