செய்திகள்

ரேணிகுண்டா அருகே ரூ.6 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்: 2 பேர் கைது

Published On 2016-12-07 05:32 GMT   |   Update On 2016-12-07 05:32 GMT
ரேணிகுண்டா அருகே காரில் கடத்திய ரூ.6 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் தமிழக வாலிபர்கள் 2 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

ரேணிகுண்டா அருகே காரில் கடத்திய ரூ.6 லட்சம் செம்மரம் பறிமுதல்

ரேணிகுண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலையா தலைமையில் போலீசார் கரகம்பாடி அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்னையை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனைச் செய்தனர். அதில் 4 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த கார் டிரைவர் பாலாஜி (வயது 26) மற்றும் கருணாகரன் (28) என்று தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செம்மரக் கட்டைகளுடன், கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். கைதான 2 பேர் மீது ரேணிகுண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News