செய்திகள்
ஐதராபாத்: கார் தீப்பற்றி எரிந்த விபத்தில் 4 பேர் பலி
ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத்தில் இன்று ஓடும்கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதில் சென்ற நான்கு பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கல் மாவட்டத்தை சிலர் வெளிநாடு செல்லும் தங்களது நண்பரை வழியனுப்பி வைப்பதற்காக இன்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள ஷம்சாபாத் விமான நிலையத்துக்கு ஒரு காரில் வந்திருந்தனர்.
வழியனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது ஐதராபாத் நகரில் உள்ள பெத்த அம்பெர்பேட் வெளிவட்ட சாலை வழியாக சென்றபோது திடீரென்று அந்தக்கார் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த சிவகிருஷ்ணா, ஸ்ரீகாந்த், ராஜு, சசிதர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி, பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கல் மாவட்டத்தை சிலர் வெளிநாடு செல்லும் தங்களது நண்பரை வழியனுப்பி வைப்பதற்காக இன்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள ஷம்சாபாத் விமான நிலையத்துக்கு ஒரு காரில் வந்திருந்தனர்.
வழியனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது ஐதராபாத் நகரில் உள்ள பெத்த அம்பெர்பேட் வெளிவட்ட சாலை வழியாக சென்றபோது திடீரென்று அந்தக்கார் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த சிவகிருஷ்ணா, ஸ்ரீகாந்த், ராஜு, சசிதர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி, பரிதாபமாக உயிரிழந்தனர்.