செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம்

Published On 2016-11-26 18:28 GMT   |   Update On 2016-11-26 18:28 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினருடன் நேற்று  இரவு 9 மணிக்கு திருமலைக்கு வந்தார். அவரை கோவில் வரவேற்பு அதிகாரி சுரேந்திரநாத் வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து காலை மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

Similar News