செய்திகள்

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னரின் சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு

Published On 2016-10-25 15:36 GMT   |   Update On 2016-10-25 15:36 GMT
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர்களின் சம்பளத்தை உயர்த்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புது டெல்லி:

தற்போது இந்திய ஜனாதிபதி ரூ.1.50 லட்சமும், துணை ஜனாதிபதி ரூ.1.25 லட்சமும் மாநில கவர்னர் ரூ.1.10 லட்சமும் மாதந்தோறும் சம்பளமாகப் பெறுகின்றனர். 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களின் சம்பளத்தையும் உயர்த்திட மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த பட்டியல் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால் ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையில் உயரும். துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சம் வரை உயரும்.

கடைசியாக 2008-ம் ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News