செய்திகள்
அரியானாவில் லாரி மோதி 9 பக்தர்கள் பலி: 14 பேர் காயம்
அரியானாவில் லாரி, வாகனம் நேருக்குநேர் மோதிய விபத்தில் 9 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர். படுகாயமடைந்த 14 பேருக்கு ஆஸ்பத்தியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சண்டிகார்:
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோகமேதி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு யாத்திரை சென்று இருந்தனர். சாமி கும்பிட்டு விட்டு தங்களது வாகனத்தில் புறப்பட்டு பஞ்சாப் திரும்பி கொண்டிருந்தனர்.
வாகனம் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் சைனிவாஸ் கிராமத்தில் வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மோதியது.
இந்த விபத்தில் 9 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோகமேதி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு யாத்திரை சென்று இருந்தனர். சாமி கும்பிட்டு விட்டு தங்களது வாகனத்தில் புறப்பட்டு பஞ்சாப் திரும்பி கொண்டிருந்தனர்.
வாகனம் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் சைனிவாஸ் கிராமத்தில் வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மோதியது.
இந்த விபத்தில் 9 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.