செய்திகள்

மகனின் கள்ளத்தொடர்பைக் கண்டித்த மருமகள்: கொடுமைப்படுத்திய ஐ.பி.எஸ். மாமனார்

Published On 2016-09-23 11:15 GMT   |   Update On 2016-09-23 11:15 GMT
குஜராத்தில் மகனின் கள்ளத்தொடர்பைக் கண்டித்த மருமகளைக் கொடுமைப்படுத்திய ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கள்ளத் தொடர்பைக் கண்டித்ததால் கணவன் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக வடலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2011-ம் ஆண்டு அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணமான ஒருசில வருடங்களில் தனது கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது அப்பெண்ணுக்கு தெரிய வந்தது. தன்னை விவாகரத்து செய்யாமல் இன்னொரு பெண்ணுடன் கணவன் குடும்பம் நடத்துவதைக் கண்டித்த அப்பெண், தன்னுடைய கணவன் குடும்பத்தாரிடம் கணவனின் திருட்டுத்தனத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனால் ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அப்பெண்ணின் மாமனார் உட்பட மொத்த குடும்பத்தினரும் மகனின் செயலைக் கண்டிக்காமல் அதற்கு பதில் மருமகளை கொடுமைப்படுத்தியுள்ளனர். புகுந்த வீட்டினரின் கொடுமைகளைத் தாங்க முடியாத அப்பெண், வதேலி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அப்பெண்ணின் மாமனார் உட்பட ஏழு பேர் மீது வடலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News