உள்ளூர் செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
- அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக சிறுவன் வந்திருந்த போது அவரது செல்போன் திருட்டு போனது.
- ஐகிரவுண்டு போலீசார் விசாரணை நடத்தி ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை:
திசையன்விளையை சேர்ந்தவர் ஆரோக்கிய சுதர்சன் (வயது 17). இவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று தனது உறவினரை பார்ப்பதற்காக வந்திருந்தார். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் மருத்துவமனை வளாகத்தில் அவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் ஆரோக்கிய சுதர்சனின் செல்போனை திருடிக் கொண்டு தப்பி சென்றார். உடனே ஆரோக்கிய சுதர்சன் ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜா வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபரை தேடி வந்தார். விசாரணையில் செல்போனை திருடியது பேட்டை உரைக்கடை தெருவை சேர்ந்த முகமது அபுபக்கர் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.