அம்பை அருகே டிரைவிங் லைசென்ஸ் எடுக்க பணம் கொடுக்காததால் வாலிபர் தற்கொலை
- நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூல்மாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- லைசென்ஸ் எடுக்க தனது பெற்றோரிடம் அவர் பணம் கேட்டுள்ளார்.
நெல்லை:
அம்பைைய அடுத்த கோடாரங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகன் பூல்மாடன்(வயது 27).
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூல்மாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வி.கே.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பூல்மாடனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பூல்மாடன் வாகனம் ஓட்டி படித்துவிட்டு அதற்கு லைசென்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார். லைசென்ஸ் எடுக்க பணம் தேவைப்பட்டுள்ளது.
உடனே அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், சிறிது நாட்கள் கழித்து லைசென்ஸ் எடுத்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த பூல்மாடன் கோபத்தில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.