தச்சநல்லூரில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- கைதான வாலிபர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- நெல்லை மாநகர கமிஷனர் அவிநாஷ் குமார் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் தேனீர் குளம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ். (வயது 27).
குண்டர் சட்டம்
இவர் மீது மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்து தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு துணை கமிஷனர் சரவணகுமார், சந்திப்பு சரக உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
சிறையில் அடைப்பு
அதன் பேரில், நெல்லை மாநகர கமிஷனர் அவிநாஷ் குமார் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சுரேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை இன்று பாளை சிறையில் அடைத்தனர்.