உள்ளூர் செய்திகள்

கவரிங் நகையை விற்க முயன்ற பெண்கள் கைது

Published On 2022-09-18 10:25 GMT   |   Update On 2022-09-18 10:25 GMT
  • கவரிங் நகைகளை விற்க முன்வந்தார் சந்தேக மடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
  • போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை கீழ வாசல் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்கெலன் (வயது 29).

சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு வந்த 2 பெண்கள் தங்களிடம் இருந்த கவரிங் நகையை ஜஸ்டின் கெலனிடம் தங்கநகை எனக்கூறி விற்க முயன்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பெண்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்கள் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி (30), லலிதா (25) ஆகியோர் என்பதும், அவர்கள் ஜஸ்டின் கெலனிடம் கவரிங் நகையை விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மகேஸ்வரி, லலிதா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News