உள்ளூர் செய்திகள்
களக்காட்டில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்
- ஆவுடையம்மாள் கோவில்பத்து குண்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- இதில் ஆவுடையம்மாள் படுகாயமடைந்தார்.
களக்காடு:
களக்காடு கோவில்பத்தை சேர்ந்தவர் மாசானம். இவரது மனைவி ஆவுடையம்மாள் (வயது 60).
சம்பவத்தன்று மதியம் ஆவுடையம்மாள் கோவில்பத்து குண்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கோவில்பத்து குண்டுதெருவை சேர்ந்த கண்ணன் மகன் சுடலைமணி (34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆவுடையம்மாள் மீது மோதியது.
இதில் ஆவுடையம்மாள் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் களக்காடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் இதுதொடர்பாக சுடலைமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.