உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.


பொத்தகாலன்விளையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-07-25 09:17 GMT   |   Update On 2022-07-25 09:17 GMT
  • காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
  • ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன் விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

வட்டார தலைவர் லூர்துமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர், சிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரங்கள், கிரைண்டர்கள், இஸ்திரி பெட்டிகள், வேஷ்டி, சேலைகள் மற்றும் கல்வி உதவித் தொகையும், விளையாட்டு ஊக்க பரிசுகளையும், நலத்திட்டங்களையும் வழங்கி வைத்து பேசினார்.

விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, சாஸ்தாவிநல்லூர் பஞ்சாயத்து தலைவர் திருக்கல்யாணி, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், துணைத் தலைவர் சங்கர், சாஸ்தாவி நல்லூர் விவசாய அபிவிருத்தி சங்க தலைவர் எட்வின் காமராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல், முருகன், நகரத் தலைவர் வேணுகோபால், யூனியன் கவுன்சிலர் குருசாமி, பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், சீமான் ஜெகன், அலெக்ஸ் உள்பட கட்சி பிரமுகர்களும் பொதுமக்களும் விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News