உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, பள்ளி மாணவர்கள் உடல் முழுவதும் விளக்கேற்றி பாதவிருச்சிகாசனம், விளக்காசன முறைகளில் யோகாசனம் செய்து அசத்திய காட்சி.

உடல் முழுவதும் தீப விளக்கேற்றி யோகாசனம் செய்த மாணவர்கள்

Published On 2023-11-26 06:37 GMT   |   Update On 2023-11-26 06:37 GMT
  • உடல் முழுவதும் தீப விளக்கேற்றி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
  • முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பதஞ்சலி யோகா மையம் சார்பில் பள்ளி மாணவர்கள் பாத விருச்சிகாசனம், விளக்கா சனம் முறையில் யோகா சனம் செய்து உடல் முழுவ தும் விளக்குகளை ஏற்றி கார்த்திகை தீபத்திருநாளை நடத்தி சாதனை படைத்தனர்.

எட்டாம் வகுப்பு மா ணவர் நரேஷ், ஆறாம் வகுப்பு மாணவர்கள் ரசூல் மற்றும் அன்பரசன் ஆகி யோர் உடல் முழுவதும் ஆச னம் செய்து விளக்கு களை ஏற்றி சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பயிற்சி ஆசிரியர் நீராத்தி லிங்கம் தலைமையில் முத்து வேல், வீர சோழ திருமாவ ளவன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் உட்பட முக் கிய பிரமுகர்கள் பங்கேற்று சாதனையை பாராட்டினர்.

Tags:    

Similar News