உள்ளூர் செய்திகள்

மகனை கத்தியால் வெட்டிய தந்தை

Published On 2023-03-15 08:49 GMT   |   Update On 2023-03-15 08:49 GMT
  • குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை கத்தியால் வெட்டிார்.
  • கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மலைச்செல்வன். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு சூர்யபிரகாஷ்(வயது21) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சூர்யபிரகாஷ் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தாய் கல்யாணியிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மலைச்செல்வனுக்கு, அவர் போனில் தகவல் தெரிவித்தார்.

இந்தநிலையில் இரவு மலைச்செல்வன் வீட்டிற்கு வந்தபோது சூர்யபிரகாஷ் வாசலில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்து மலைச்செல்வன் அவரை கண்டித்தார். ஆனால் தந்தையுடனும் சூர்யபிரகாஷ் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மலைச்செல்வன், சூர்யபிரகாஷ் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை கை, கால்களில் வெட்டினார். சூர்யபிரகாஷின் நண்பர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கல்யாணி கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News