உள்ளூர் செய்திகள்

தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் நெய்குப்பி ஊராட்சியில் அரசின் திட்டங்கள் குறித்து புகைப்படக்கண்காட்சி

Published On 2022-06-22 09:09 GMT   |   Update On 2022-06-22 09:09 GMT
  • விழுப்புரம் மாவட்டம் நெய்குப்பி ஊராட்சியில் அரசின் திட்டங்கள் குறித்து புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
  • தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை நெய்குப்பி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஓன்றி யம், நெய்குப்பி ஊராட்சி யில் தமிழக அரசின் சாத னைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

புகைப்படக் கண்காட்சி யில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொறுப்பேற்று, முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்ப மிட்டு, நடைமுறைப்படுத்திய திட்டங்களான ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகரப் பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம், முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகைப் படங்கள் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகை யில் இடம்பெற்றிருந்தன.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள், திருக்கோவில் களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச் சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர் களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதி யில் முதல்-அமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்து வம், இல்லம் தேடிக் கல்வித்திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல்வரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை நெய்குப்பி ஊராட்சியினை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

Tags:    

Similar News