உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயிலில் பிளேடால், கை கால்களை அறுத்து கைதி ரகளை

Published On 2022-06-30 10:48 GMT   |   Update On 2022-06-30 10:48 GMT
  • டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
  • சிறை அதிகாரிகள் விசாரணை

வேலூர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் பாண்டி (வயது 33).

பல வழக்குகளில் தொடர்புடைய இவர் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை பாண்டி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கை, கால்களை அறுத்து கொண்டு ரகளை செய்தார்.

இதனைக் கண்ட சிறை காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜெயில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பிளேடு எப்படி கிடைத்தது என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News