search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoners"

    • 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது.
    • காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    லண்டன்:

    பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலை உள்ளது. 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது. சோதனையின்போது சிறை வளாகத்தில் ரேடான் என்னும் கதிரியக்க தனிமத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இதனால் காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறைச்சாலையில் இருந்து 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு வேறுசிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைவளாகத்தில் பரவி இருக்கும் ரேடான் அளவை குறைக்கும் பணி நடந்து வருகிறது.

    • கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி உத்தரவு.
    • ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு.

    தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனையில் உள்ள கைதிகள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி, விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, கடலூர் 4, கோவை 6, வேலூர் 1, புழல் 1 என 12 சிறை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

    • நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
    • போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
    • வீடியோ கால் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    "சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 14 ஆண்டு தண்டனை முடிந்தும், விடுதலை செய்யப்படவில்லை.
    • பிற மாநிலங்கள் போல புதுவை யிலும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் ஆயுள் கைதிகள் 8-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இவர்கள் 14 ஆண்டு தண்டனை முடிந்தும், விடுதலை செய்யப்பட வில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காந்தி, காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாளில் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

    ஆனால் புதுவையில் இது போன்ற நடைமுறை இல்லை. இந்த கைதிகளில் சிலர் 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த கைதிகளை விடுவிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் மனு அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று புதுவை தலைமை நீதிபதி சந்திரசேகரனை ஆயுள் தண்டனை கைதிகளின் குடும்பத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில், 14 ஆண்டுகள் முடிந்தும் பல ஆண்டாக தங்கள் குடும்பத்தி னர் சிறையில் உள்ளனர். நன்னடத்தையை சுட்டிக்காட்டி சிறை நிர்வாகம் விடுவிக்க முடி யாது என கூறி வருகிறது.

    இந்த கைதிகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். சிலர் சிறைக்குள் தொழில்கள் செய்துள்ளனர், அவர்களுக்கு சான்றிதழம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிறை நிர்வாகம் அவர்களை விடுவிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. 

    • மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
    • 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட சிறைச் சாலைகளில் தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சிறைக் கைதிகளுக்கான சிறை நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்த நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூா் கிளை சிறைச்சாலையில் தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் சுசீலா தலைமையிலும், கும்பகோணம் கிளை சிறைச்சாலையில் திருவிடைமருதூா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்

    சிவபழனி தலைமையிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் தஞ்சாவூா் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் பாரதி தலைமையிலும், திருச்சி மத்திய சிறையில் தஞ்சாவூா் குற்றவியல் நீதித்துறை விரைவு நீதிமன்ற நடுவா் முருகேசன் தலைமையிலும் நடைபெற்றது.

    இவற்றில் மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

    இந்த நிகழ்வில், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா், இளநிலை நிா்வாக உதவியாளா் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • சிறைவாசிகள் மனம் திருந்தி மறுவாழ்வு பெறும் நோக்கில் சிறையில் நல்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
    • அதன் ஒரு பகுதியாக சிறைவாசி களுக்கு இசை பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் சிறைவாசிகள் மனம் திருந்தி மறுவாழ்வு பெறும் நோக்கில் சிறையில் நல்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சிறைவாசி களுக்கு இசை பயிற்சியும் வழங்கப்படுகிறது. சேலம் மத்திய சிறையில் சிறை வாசிகளுக்கு அங்கீக ரிக்கப்பட்ட அறக்கட்டளை பயிற்சியாளர்களை கொண்டு இசைப் பயிற்சி வாத்தியங்கள் வாசிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் முறையாக கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டு சிறைச்சாரல் இசைக் குழு என்ற குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறைச்சா லைக்குள் தங்களது நிகழ்ச்சிகளை நடத்துவர்கள். இதனிடையே சிறையில் ஒத்திகையில் ஈடுபட்ட சிறைச்சாரல் குழுவினர், உன் மதமா என் மதமா என்ற தத்துவ பாடலை பாடி அசத்தியுள்ளனர். சிறைவாசிகளின் மறு வாழ்வுக்காக தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இந்த குழுவினர் புதிய உத்வே கத்துடன் செயல்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
    • கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் தண்டனை கைதிகளாக இருப்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியில் வருவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தமிழக அரசு செய்து வருகிறது.

    கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் பலர் வழக்கு விசாரணை முடிந்து சிறையில் தண்டனை காலத்தை கழித்து வருகிறார்கள்.

    இதுபோன்று தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

    சிறைகளில் உள்ள தோட்டங்களில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணை வித்துக்களை பயிரிட்டு அறுவடை செய்வது, இந்த நிலக்கடலையை சிறையிலேயே செக்கு எண்ணையாக தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகள் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

    இந்த பொருட்கள் சந்தை படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி மேற் பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மதுரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தினமும் ரூ.1 லட்சம் அளவுக்கு பொருட்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

    இப்படி சிறைச்சாலை அருகில் உள்ள சந்தைகள் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வர வேற்பை பெற்றுள்ளதால் சிறைகளில் உற்பத்தி அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தாங்கள் செய்யும் வேலையை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய சிறை கைதிகள் மாதம் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பாதிக்கிறார்கள்.

    கைதிகள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுவதால் ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என சம்பாதிக்கப்பவர்களும் உண்டு. சிறையில் தரமான சாப்பாடு உள்ளிட்டவைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் இந்த சம்பளம் கைதிகளுக்கு மிச்சமாகி விடுகிறது.

    கைதிகள் சம்பாதிக்கும் இந்த பணம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படுவது இல்லை. இதுபோன்ற சம்பள பணத்தை கையாள்வதற்கே கணக்கர் ஒருவர் சிறைச்சாலைகளில் உள்ளார். அவர் கைதிகள் சம்பள பணத்தை பத்திரமாக வைத்திருந்து குடும்பத்தினர் பார்க்க வரும்போது அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.

    இதன்மூலம் சிறையில் இருந்தாலும் கைதிகள் தங்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து கொடுக்கும் நிலையில் இருந்து வேலைகளை செய்து வருவது அவர்களை மனதளவில் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு உந்து சக்தியாகவே இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    நாமக்கல்:

    தமிழக முழுவதும் பிடிவாரண்ட் கைதிகள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதை அடுத்து தமிழகம் முழுவதும் தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இதே போல நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக போலீசார் தொடர் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக கோர்ட் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 10-க்கும் மேற்பட்ட கைதிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்து வருகிறார்கள்.

    மேலும் தலைமறைவாக உள்ள 60 பேரை பிடிக்க போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டை தொடரும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் கைதிகளுடன், போலீசார் கைப்பந்து விளையாடினர்.
    • கைதிகள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கைதிகளின் உடல் திறனை மேம்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மத்திய சிறையில் ஏற்கனவே கைப்பந்து, இறகுப்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான உள்-வெளி அரங்கங்கள் உள்ளன. அங்கு கைதிகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கைதிகள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். அங்கு வந்த மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் அதிகாரிகள் கைப்பந்து விளையாடும் கைதிகளுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.

    • மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் டாக்டர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது.
    • மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழக சிறைகளில் மாரடைப்பு மரணங்கள் தொடர்கதையாக உள்ளன. போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக மருத்துவ ரீதியாக ஆய்வு செய்தனர். அப்போது கைதிகள் மட்டுமின்றி போலீசாருக்கும் மாரடைப்பு பற்றிய சரியான புரிதல்-விழிப்புணர்வு இல்லை என்பது தெரிய வந்தது.

    தமிழக சிறைச்சாலை களில் உள்ள கைதிகளுக்கும் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான மாரடைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது. மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாரடைப்பு சிறப்பு மருத்துவ நிபுணர் மதன்மோகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை இருதய பிரிவு விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் கூறியதாவது:-

    மனித உடலில் இதயம் இயங்கவில்லை என்றால் மற்ற பாகங்கள் செயல்படாது. ஒரு குடும்பம் தலைவரை இழந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடுகட்ட முடியாது. போலீசாரும், டாக்டர்களும் ஒன்றுதான். ஏனென்றால் வருடத்தின் 365 நாட்களும் பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் பேருக்கு உடல் பரிசோதனை நடத்தினோம். அதில் 300 பேருக்கு மாரடைப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களில் 50 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினோம். சினிமாவில் வருகிற மாதிரி மாரடைப்பு பாதிப்பு என்பது உடனடியாக வராது. இதற்கான அறிகுறிகள் ஏற்படும். அப்போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது முக்கியம்.

    மாரடைப்பு பாதிப்பு ஏற்படுபவருக்கு உடலில் ரத்தம் செல்லாத பகுதியில் செல் அணுக்கள் படிப்படி யாக இறந்துவிடும். அதன் பிறகு அவரை மரணத்தின் பிடியில் இருந்து மீட்டு கொண்டு வருவது சிரமமான விஷயம். இதயத்தில் 3 தமனிகள் உண்டு. அதில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுவது தான் மாரடைப்பு ஆகும்.

    நடக்கும்போது நெஞ்செரிச்சல் இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறி. சிலர் அல்சர் என்று மாத்திரை சாப்பிடுகிறார்கள். அது தவறு. சிலருக்கு படி ஏறும் போது அதிகப்படியாக மூச்சு வாங்கும். இது பிரச்சினையின் அறிகுறி. அவர்கள் உடனடியாக இ.சி.ஜி. எடுத்து பார்த்தால் மாரடைப்பு பாதிப்பு வருமா? வராதா? என்பதை கண்டறிய இயலும்.

    நெஞ்சுவலி, மயக்கம், மூச்சு வாங்கல், களைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறி. சிகரெட் குடித்தால் இதய புற்றுநோய் வரும் என்று சொல்வார்கள். ஆனால் மாரடைப்பு தான் முக்கியமாக வரும். 10 ஆண்டுகள் சிகரெட் பிடித்தால் 100 சதவீதம் மாரடைப்பு வாய்ப்புண்டு. அப்பாவுக்கு குறிப்பிட்ட வயதில் மாரடைப்பு வந்தால் பையனுக்கும் வரும். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் பாதிப்பு வரும்.

    வயது முதிர்வு, உடல் குண்டு தன்மை, பதற்றம், நீரிழிவு, ரத்த கொதிப்பு ஆகியவை மாரடைப்பின் வேகத்தை அதிகரிக்கும். பெண்களுக்கு மெனோபாசுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு வர வாய்ப்புகள் உண்டு. 50 வயதை தாண்டிய பெண்கள் வருடாந்திர சோதனை செய்து பார்க்க வேண்டும்.

    புகை பிடிப்பதால் 4 மடங்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இ-சிகரெட் புகைத்தால் பாதிப்பு வராது என்று சொல்வார்கள். அப்படி இல்லை. மூளை பாதிப்பு ஏற்படும். 10 ஆண்டுகள் புகை பிடித்தல், மாரடைப்பு பாதிப்பு உறுதியாக வரும். அறியாத வயதில் பழகிவிட்டோம்: அறிந்த வயதில் விட்டுவிட வேண்டும். உடல்நல குறைவு என்று படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு சிகரெட் நினைப்பு வராது. உயிர் முக்கியம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    புகையிலை, மதுபானம் அருந்தும் போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். பீர் குடித்தால் பாதிப்பு குறைவு என்பார்கள். அப்படி அல்ல. பீர் குடித்தால் 3 ஆண்டுகளில் இதயம் வீங்கி விடும். நீரிழிவு மிகவும் கொடியது. ஆளைக் கொல்லும் வியாதி. 10 வருடத்திற்கு பிறகு தான் பாதிப்பு தெரியும். மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 3 மடங்கு உண்டு. ஆண்டுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பாதிப்பு தெரிகிறது. இதில் 60 சதவீதம் பேருக்கு மரண வாய்ப்பு அதிகமுண்டு. உடற்பயிற்சி செய்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். மாரடைப்பு வந்தவுடன் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.
    • திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார்

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறை கைதிகள்

    இவர்களில் பலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டு குற்றவாளிகளாகவும், சிலர் பழிக்கு, பழி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை கைதிகளாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ நூலகத்துறை சார்பில் சிறைச்சாலைக்குள் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கைதி களுக்கு புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. பலர் சிறைக்குள் இருந்தே படித்து கல்லூரி பேராசிரி யராகவும் உயர்ந்துள்ளனர். அவர்களை போல் மற்ற கைதிகள் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி, வாழ்வில் உயரும் விதமாக அவர்களுக்கு புத்தகங்களை வழங்கிட சமூக ஆர்வலர்கள் ஆசைப்படுகின்றனர்.

    நூலகம்

    ஆனால் இந்த நூலகத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது விருப்பத்தின்பேரில் புத்தகங்களை வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை தீர்க்கும் விதமாக பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.

    அந்த அறைக்கு சிறை கைதிகளுக்கு புத்தக தானம் செய்யும் அறை என பெயரிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இலவசமாக வழங்க விரும்பும் புத்தகங்களை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை சிறை காவலர்கள் எடுத்துச்சென்று சிறையில் உள்ள நூலகத்தில் சேர்ப்பார்கள்.

    ரூ.25 ஆயிரம் புத்தகம்

    இன்று திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார். அதனை உதவி ஜெயிலர் சண்முகம், முதல் தலைமை காவலர் முத்துச்சாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    இதில் முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தொழில் அதிபர்கள் மவுலானா, பீர் மைதீன், ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் இயக்குனர்கள் எஸ். செய்யது முகம்மது, எம்.செய்யது முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×