உள்ளூர் செய்திகள்
- குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்
திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கொய்யா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது29) கூலி தொழிலாளியான இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் ேசார்ந்த கிருஷ்ணவேணி (28)என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை.
இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறில் கிருஷ்ணவேணி அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.