உள்ளூர் செய்திகள்

கார் கண்ணாடியை உடைத்து திருட்டு

Published On 2023-01-31 09:47 GMT   |   Update On 2023-01-31 09:47 GMT
  • திருச்சி தில்லை நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு
  • போலீசார் வழக்கு பதிவு விசாரணை

திருச்சி

திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் துவரங்குறிச்சியை சேர்ந்த அல்லாபக்ஸ் என்பவர் தனது காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த சாம்சங் டேப்பை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அல்லாபக்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News