பக்கத்து வீட்டு டிவி.ஹோம், தியேட்டரை நொறுக்கிய வாலிபர்
- டிவி.ஹோம், தியேட்டரை நொறுக்கிய பக்கத்து வீட்டு வாலிபரால் பரபரப்பு
- சப்தம் வைத்து சினிமா பார்த்து ரசித்துள்ளார்
திருச்சி :
திருச்சி கருமண்டபம் குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன்(வயது21). இவரின் வீட்டில் அருகில் கார்த்திக்(27) என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் கங்காதரன் தனது வீட்டு டிவி மற்றும் ஹோம் தியேட்டரில் அதிக அளவு சப்தம் வைத்து சினிமா பார்த்து ரசித்துள்ளார்.
காதைச் செவிடாக்கும் சப்தத்தால் ஆத்திரமடைந்த கார்த்திக் டிவி சத்தத்தை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த கார்த்திக் அவரது சகோதரர் பாலு ஆகியோர் சேர்ந்து கங்காதரன் வீட்டிலிருந்த டிவி, மற்றும்
ஹோம் தியேட்டரை அடித்து நொறுக்கினர். இதில் கங்காதரன் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் வாலு ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.