உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம்

Published On 2022-12-14 09:44 GMT   |   Update On 2022-12-14 09:44 GMT
  • போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம் நடைபெற்றது
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

திருச்சி

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதில் வாரிசு பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து இயக்கம் கைவிடப்பட வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை வாபஸ் பெற்று அகவிலைப்படி உயர்வு அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்துக் கழகம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சம்மேளன திருச்சி மண்டல தலைவர் நேரு, துணை பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் க.சுரேஷ், தலைவர் வே.நடராஜா உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கோஷமிட்டவாறு பங்கேற்றனர்.

Tags:    

Similar News