உள்ளூர் செய்திகள்
சட்டவிரோதமாக மணல் கடத்தியவர் மீது வழக்கு
- சட்டவிரோதமாக மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
- வேனை பறிமுதல் செய்தனர்.
திருச்சி:
மேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே நேற்று திருவரங்கம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியை கடந்து சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்ததில், சட்டவிரோதமாக காவிரி ஆற்றிலிருந்து மணல் அள்ளி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் பயண ஓட்டிவந்த விஜய் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.