உள்ளூர் செய்திகள்
திருச்சியில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி
- அந்தோணி தினகரன் த ன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரின் நிகழ்ச்சிக்கு தன்னுடைய மகன் ஜோஸ்வா(14) உடன் சென்றார்.
- வாய்க்காலில் குளித்த ஜோஸ்வா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
திருச்சி,
திருச்சி புத்தூர் ஆபீஸ் காலனி அக்ஷயா அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருபவர் அந்தோணி தினகரன் (43). இவர் கிரஷர் மணல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய அவர் தன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரின் நிகழ்ச்சிக்கு தன்னுடைய மகன் ஜோஸ்வா தினகரன்(14) உடன் சென்றார்.
நிகழ்ச்சி முடிந்து திரும்பிய போது ஜோஸ்வா , குழுமணி சாத்தனூர் கட்டளை வாய்க்காலில் குளிப்பதாக கூறியதை அடுத்து அந்தோணி தினகரனும் அவரை அங்கே குளிப்பதற்கு விட்டுவிட்டு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். வாய்க்காலில் குளித்த ஜோஸ்வா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து அந்தோணி தினகரன் கேகே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.