உள்ளூர் செய்திகள்

ஆடி வெள்ளி இசை விழா நிகழ்ச்சி

Published On 2022-07-23 10:05 GMT   |   Update On 2022-07-23 10:05 GMT
  • ஆடி வெள்ளி இசை விழா நிகழ்ச்சி நடந்தது
  • ஸ்ரீரங்கத்தில் நகர நலச்சங்கம் சார்பில் நடந்தது

திருச்சி:

திருச்சி நாத ஸூதா ரஸம் மற்றும் ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளுபாகல் மடம் ஸ்ரீ ஸ்ரீ விக்ஞான நிதி சபா மந்திர் கல்யாண மண்டபத்தில் நேற்று (22-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் 8 மணி வரை நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை மாபெரும் ஆடி வெள்ளி இசை விழா நடைபெற்றது.

இந்த இசை விழாவில் முளுபகல் மட அதிகாரி ரகோத்துமாச்சார், சன்மானம் வழங்கி பாராட்டினார்.

பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி டாக்டர் ஷேக் சின்ன மௌலானாவின் சிஷ்யர் கள் நாதஸ்வர வித்வான் கள் பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா ஷேக் மெகபூப் சுபானி, பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா காலிஷாபீ மெகபூப், எஸ். பெரோஸ் பாபு மற்றும் தவில் வித்வான்கள் ஸ்ரீரங்கம் பி.எம்.சங்கர், ஸ்ரீரங்கம் வி.ஜி.முருகன் குழுவினர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை திருவாரூர் குஞ்சிதபாதம், நெய்வேலி நாகசுப்பிரமணியன், சேதுராமன், சுரேஷ் வெங்கடா–சலம் ஆகியோர் ஒருங்கி–ணைத்தனர்.

இசை நிகழ்ச்சியில் அறிவாளர் - பேரவை மற்றும் ஸ்ரீரெங்கம் நகர் நலச்சங்க மக்கள் தொடர்பு அதிகாரி ரொட்டேரியன் கே.சீனிவாசன், ரொட்டேரியன் என்ஜினீயர் அசோகன், ரொட்ேடரியன் பாலகிருஷ்ணன் மற்றும் பக்த கோடிகள், இசை பிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News