உள்ளூர் செய்திகள்

திருச்சி மதுரம் ஆஸ்பத்திரியில் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக டாக்டர்கள் நியமனம் -தலைவர் ஐவன் மதுரம் தகவல்

Published On 2022-08-18 09:58 GMT   |   Update On 2022-08-18 09:58 GMT
  • பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க பெண் டாக்டர்களை நியமித்துள்ளோம்.
  • கர்ப்பகால, மகப்பேறு மற்றும் பெண்கள் நலனுக்கான ஏனைய சிகிச்சைகள் பெண் டாக்டர்கள் மட்டுமே செய்வார்கள்.

திருச்சி :

திருச்சி மாநகர மக்களுக்கு நீண்ட நெடிய காலமாக சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளித்து வரும் மதுரம் ஆஸ்பத்திரியில் பெண்களுக்கு என பிரத்தியேக டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஐவன் மதுரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க பெண் டாக்டர்களை நியமித்துள்ளோம். இதில் பெண்களுக்கு சகல உடற்பரிசசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்குமுறை புதிய மற்றும் உயரிய ஆய்வகவசதியுடன் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

ரேடியாலஜி சிகிச்சைகள், சர்க்கரை நோய்க்கான நவீன மருத்துவம், கர்ப்பகால, மகப்பேறு மற்றும் பெண்கள் நலனுக்கான ஏனைய சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சைகள், காது, மூக்கு, தொண்டை பிரச்சினைக்கான அறுவை சிகிச்சைகளை பெண்களுக்கு பெண் டாக்டர்கள் மட்டுமே செய்வார்கள்.

மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை மேம்படுத்தி வருவதை கருத்தில் கொண்டு இந்த புதிய சேவை முறையை எமது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனைப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News