உள்ளூர் செய்திகள்

திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

Published On 2023-08-13 08:52 GMT   |   Update On 2023-08-13 08:52 GMT
  • திருச்சியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
  • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

திருச்சி,

திருச்சி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கவும்,தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அதன்படி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ரவிக்குமார் (வயது 61) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர்.இதே போன்று பாலக்கரை பகுதி பீமநகர் பொது கழிப்பிடம் அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த கோரிமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (24)என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பட்டவரத் ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மேல சிந்தாமணி பகுதியில் சேர்ந்த சிவகுரு (22) என்ற வாலிபரை கோட்டை போலீஸ் கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர்.தில்லைநகர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சிவா ( 22)என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். உறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட புத்தூர் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பிரபாகரன் (43) என்பவரை ஒரே ஒரு போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News