உள்ளூர் செய்திகள்

திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-07-23 09:49 GMT   |   Update On 2022-07-23 09:49 GMT
  • திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் கிள்ளிவளவன். இவரது மகள் மதுமிதா. கல்லூரி மாணவி.
  • வீரசாமிவெளியில் செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை.

திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் கிள்ளிவளவன். இவரது மகள் மதுமிதா. கல்லூரி மாணவி.

இவர் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர் சேர்ந்தவர் வீரசாமி (வயது 42). இவர் வெளியில் செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வீராசாமியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News