உள்ளூர் செய்திகள்
பெரியகுளம் அருகே ஆட்டோக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிளை நூலகம், பஸ் நிறுத்தம் மற்றும் மண்டுகருப்பணசாமி கோவில் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
- ஆட்டோக்களை நிறுத்துவதால் அவசரகால வாகனங்களான 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியவில்லை.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிளை நூலகம், பஸ் நிறுத்தம் மற்றும் மண்டுகருப்பணசாமி கோவில் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அவசரகால வாகனங்களான 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியவில்லை.
மேலும் பள்ளி மாணவிகளை சிலர் கேலி கிண்டல் செய்வதால் பிரச்சிைன ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே போலீசார் இதற்கு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.