உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் வியாபாரி சுருண்டு விழுந்து சாவு

Published On 2022-09-02 09:54 GMT   |   Update On 2022-09-02 09:54 GMT
  • ரவிச்சந்திரன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(38). காய்கறி வியாபாரி. திருமணமாகவில்லை. சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென சுருண்டு கீேழ விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக ரவிச்சந்திரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News