உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வாலிபர்களுக்கு வீடு தேடி சென்று கஞ்சா சப்ளை செய்தவர் கைது

Published On 2023-03-13 06:16 GMT   |   Update On 2023-03-13 06:16 GMT
  • பவானி நகர் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.
  • ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பவானி நகர் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது பிள்ளையார் கோவில் அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனையடுத்து அவரிடம் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர் திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த பனியன் தொழிலாளியான ஜெயக்குமார் (வயது 30) என்பதும் வாலிபர்களுக்கு மோட்டார் சைக்கிளில் வீடு தேடி சென்று கஞ்சா சப்ளை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News