உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை பஸ் நிலையத்தில் வாலிபர் திடீர் சாவு

Published On 2022-08-25 06:02 GMT   |   Update On 2022-08-25 06:02 GMT
  • மணிகண்டன் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
  • உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடுமலை :

உடுமலையை அடுத்த உரல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 69 ).இவர் தனது மனைவி மற்றும் 3 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.இதில் இளைய மகன்(வயது 33) மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.இதனையடுத்து மணிகண்டனை திண்டுக்கல்லில் உள்ள ஒரு போதை அடிமை மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.ஆனால் சிகிச்சையில் விருப்பமில்லாத மணிகண்டன் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார்.

சம்பவத்தன்று இரவு உடுமலை பஸ் நிலையத்தில் படுத்திருந்த மணிகண்டனுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.போதைக்கு அடிமையான இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News