உள்ளூர் செய்திகள்
அவினாசியில் 10 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
- அவினாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
- டிராவல்ஸ் பஸ்சிலிருந்து இறங்கிய ஒரு பயணியை பிடித்து விசாரித்தனர்.
அவினாசி :
அவினாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் போலீசார் அவினாசியை அடுத்து அவினாசிலி ங்கம்பாளையம் பிரிவு அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் விஜய வாடாவிலிருந்து கோவை நோக்கி வந்த டிராவல்ஸ் பஸ்சிலிருந்து இறங்கிய ஒரு பயணியை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ராஜா மகன் சுருளிமுத்து(28) என்பதும் அவர் கொண்டுவந்த பையில 10 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்ப்ப டுத்தினர். பின்னர் சிறை யில் அடைத்தனர்.