உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
- போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெள்ளகோவில் பழைய பஸ் நிலையம் அருகே விற்பனைக்காக 80 கிராம் கஞ்சா வைத்திருந்த வெள்ளகோவில், தீரன் சின்னமலை நகர் பகுதியை சேர்ந்த பழனிகுமார் மகன் ஸ்ரீநாத் (23,)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 80 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வெள்ளகோவில் போலீசார், அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.