உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடம் அருகே நரிக்குறவர் சமூக மக்கள் சாலை மறியல்

Published On 2022-10-07 07:30 GMT   |   Update On 2022-10-07 07:30 GMT
  • பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர பகுதியில் நரிக்குறவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்
  • அங்கு கோவில் கட்டுவதற்காக அவர்கள் பணிகள் மேற்கொண்டு வந்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர பகுதியில் நரிக்குறவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கு வருவாய் துறை சார்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு கோவில் கட்டுவதற்காக அவர்கள் பணிகள் மேற்கொண்டு வந்தனர்.

கோவில் கட்டுவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வருவாய்த் துறையினரை கண்டித்து அறிவொளி நகர் - பல்லடம் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர் இதனால் சுமார் பத்து நிமிடம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News